பதிவு செய்த நாள்
12 ஆக2020
22:59
திருப்பூர்:சீனாவின் ஜவுளி ஏற்றுமதி, சரிவை சந்தித்துள்ள நிலையில், நம் நாட்டு ஜவுளித் துறையினர், புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், சீனாவின் பிரதான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களின் விற்று கொள்முதல் அளவு, 16.4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது; லாப விகிதமும், 19 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது.
இது குறித்து, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தினர் கூறியதாவது:சீனாவுக்குப் பதிலாக, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினர், நம் நாட்டு நிறுவனங்களுக்கு, ‘ஆர்டர்’களை தருவர் என்று எதிர்பார்க்கிறோம். தரத்துடன் ஆடைகளை நாம் தயாரித்தாலும், வங்கதேசம், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகள், வரியற்ற சலுகைகளைப் பெறுவதால், நம் நாட்டு வர்த்தகத்துக்குப் போட்டியாக விளங்குகின்றன.
ஊரடங்கின்போது, திருப்பூர், கோவை, சென்னை உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி, ஆடை நிறுவனங்கள் முக கவசம், பாதுகாப்பு கவச உடைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி, புதிய வர்த்தக பாதையை ஏற்படுத்தின. தொழில்நுட்ப ஜவுளிக்கான வாய்ப்பை நாமும் பெற வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசு ஊக்கம் தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|