மியூச்சுவல் பண்டு திட்டங்களில் குறையும் எஸ்.ஐ.பி., முதலீடுகள் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் குறையும் எஸ்.ஐ.பி., முதலீடுகள் ...  கடன் தவணை சலுகை வசதியால் புதிய சிக்கல் கடன் தவணை சலுகை வசதியால் புதிய சிக்கல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உபரித்தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
22:36

மும்பை:மத்திய அரசுக்கு, 57 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் உபரித் தொகையை வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த 2019 – 20ம் கணக்கு ஆண்டுக்கான 57 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் உபரித் தொகையை, ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு வழங்க, சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இடர்ப்பாட்டு நிதியை 5.5 சதவீதமாக பரமாரிக்கவும், நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது.

ரிசர்வ் வங்கி மத்திய நிர்வாக குழுவின் 584 வது கூட்டத்தில் மேலும் சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்த கூட்டத்தில், புதுமை மையம் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை; உள்நாட்டு மற்றும் உலகளவிலான சவால்கள் குறித்தும், ரிசர்வ் வங்கி அது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)