மொத்த விலை பணவீக்கம் 0.58 சதவீதம் குறைந்தது மொத்த விலை பணவீக்கம் 0.58 சதவீதம் குறைந்தது ...  தொழில்நுட்பத் துறையில்  முதலீடுகள் அதிகரிப்பு தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் அதிகரிப்பு ...
பழைய கட்டடத்துக்கு திரும்பும் அனில் அம்பானி அலுவலகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
22:48

மும்பை:நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமையகத்தை, கடந்த மாத இறுதியில், யெஸ் பேங்க் கையகப்படுத்தியது. தலைமையகம் கைவிட்டுப் போனதை அடுத்து, ரிலையன்ஸ் குழுமம், இதற்கு முன் இருந்த இடத்துக்கு திரும்பி செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

யெஸ் பேங்க்

அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் பேங்குக்கு செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், மும்பை சான்டாகுரூசில் இருக்கும் அவரின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தியது.மேலும், தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருக்கும், அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும் யெஸ் பேங்க் கையகப்படுத்தியது.

இந்நிலையில், தலைமையகத்தையும், அனில் அம்பானியின் அலுவலகத்தையும், தெற்கு மும்பையில் உள்ள, பல்லார்டு எஸ்டேட்டில் உள்ள, கட்டடத்துக்கு மாற்றக்கூடும் என தெரிகிறது.கடந்த, 2018 ஆரம்பம் வரை, இக்கட்டடத்தில் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.

சந்தேகம்

இப்போதிருக்கும் கொரோனா சூழலில் வேறு இடத்துக்கு மாறுவது நீண்ட நாள் எடுக்கும். எனவே, இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பான, பழைய அலுவலகத்துக்கே திரும்ப முடிவு செய்து, அங்கு வேலைகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.ஆனாலும், 6 ஆயிரம் சதுர அடியில், மூன்று தளங்களை கொண்ட, பல்லார்டு எஸ்டேட் கட்டடம், சான்டாகுரூஸ் அலுவலகத்தில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)