பதிவு செய்த நாள்
14 ஆக2020
22:48
மும்பை:நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமையகத்தை, கடந்த மாத இறுதியில், யெஸ் பேங்க் கையகப்படுத்தியது. தலைமையகம் கைவிட்டுப் போனதை அடுத்து, ரிலையன்ஸ் குழுமம், இதற்கு முன் இருந்த இடத்துக்கு திரும்பி செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.
யெஸ் பேங்க்
அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் பேங்குக்கு செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், மும்பை சான்டாகுரூசில் இருக்கும் அவரின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தியது.மேலும், தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருக்கும், அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும் யெஸ் பேங்க் கையகப்படுத்தியது.
இந்நிலையில், தலைமையகத்தையும், அனில் அம்பானியின் அலுவலகத்தையும், தெற்கு மும்பையில் உள்ள, பல்லார்டு எஸ்டேட்டில் உள்ள, கட்டடத்துக்கு மாற்றக்கூடும் என தெரிகிறது.கடந்த, 2018 ஆரம்பம் வரை, இக்கட்டடத்தில் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.
சந்தேகம்
இப்போதிருக்கும் கொரோனா சூழலில் வேறு இடத்துக்கு மாறுவது நீண்ட நாள் எடுக்கும். எனவே, இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பான, பழைய அலுவலகத்துக்கே திரும்ப முடிவு செய்து, அங்கு வேலைகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.ஆனாலும், 6 ஆயிரம் சதுர அடியில், மூன்று தளங்களை கொண்ட, பல்லார்டு எஸ்டேட் கட்டடம், சான்டாகுரூஸ் அலுவலகத்தில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|