பதிவு செய்த நாள்
14 ஆக2020
23:03
மும்பை:கடந்த ஜூலை மாதத்தில், தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து, நிதிச் சேவைகள் துறை மற்றும் மருந்து துறையில் அதிகளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை, இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீடுகள், பாதியாக குறைந்துள்ளன.இந்நிறுவனங்கள், ஜூலை மாதத்தில், 30 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடு செய்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலையில், 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ள பட்டு ள்ளன. கடந்த ஜூன் மாதத்தில், முதலீடு, 51 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இருப்பினும், ஜியோ பிளாட்பார்ம்ஸ் வணிகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை விலக்கி வைத்து பார்த்தால், நடப்பு ஆண்டில், ஜூலை மாதத்தில் முதலீடுகள் சிறப்பாகவே இருந்துள்ளது.
ஜியோ முதலீடுகளை தவிர்த்து, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள், ஜூலையில் மொத்தம், 27 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன.இம்மாதத்தில் மொத்தம், 77 முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 10 கோடி டாலருக்கும் அதிகமான முதலீடுகள் பத்து ஆகும். கொரோனாவுக்கு முன்பாகவே இருந்த பொருளாதார மந்த நிலை காரணமாக, நடப்பு ஆண்டில் முதலீடுகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|