பதிவு செய்த நாள்
19 செப்2020
21:01
புதுடில்லி:‘கேம்ஸ்’ எனும், கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், நாளை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதற்கு முன்பாக, துணிகர முதலீட்டு நிறுவனங்கள் மூலம், 666.56 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது.
இந்நிறுவனம், 35 துணிகர முதலீட்டாளர்களுக்கு, 1,230 ரூபாய் வீதம், 54.19 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த, 35 துணிகர முதலீட்டாளர்களில், 13 மியூசுவல் பண்டு நிறுவனங்கள், 17 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், 3 காப்பீட்டு நிறுவனங்கள், 2 மாற்று முதலீட்டு பண்டுகள் ஆகியவை அடங்கும்.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்கி, 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 2,240 – 2,242 கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கேம்ஸ் தெரிவித்துள்ளது.கேம்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப அடிப்படையிலான உள் கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|