இந்தியர்கள் மத்தியில் குறையும் சேமிப்பு இந்தியர்கள் மத்தியில் குறையும் சேமிப்பு ...  வங்கி துறை வளர்ச்சிக்கு ராஜன் ஆலோசனை வங்கி துறை வளர்ச்சிக்கு ராஜன் ஆலோசனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிச் சேவை செயலிகளை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
21:11

கொரோனா தொற்று காரணமாக, பலரும் வங்கி கிளைகளுக்கு நேரில் செல்வதற்கு பதிலாக, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை சேவைகளை நாடி வருகின்றனர். இதுவரை நவீன சேவைகளை பயன்படுத்த தயங்கியவர்கள் கூட, தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றனர். இது வரவேற்க தக்கதே என்றாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வங்கிச் சேவை செயலிகளை முதல் முறையாக பயன்படுத்துபவர்கள், அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியம்.


போலி செயலிகள்:


வங்கிச்சேவை செயலிகளை பயன்படுத்துபவர்கள் முதலில், போலி செயலிகள் பல இருப்பதை உணர வேண்டும். எந்த செயலியாக இருந்தாலும், பயன்படுத்தும் முன் அவை சரியான செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செயலிகள் தொடர்பான பயனாளிகளின் விமர்சன கருத்துகள் இதற்கு உதவும்.


வங்கி இணையதளம்:



போலி செயலிகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க எளிய வழி, மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து அவற்றை தரவிறக்கம் செய்யாமல், வங்கியின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளலாம்.


குறுஞ்செய்தி எச்சரிக்கை:


டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துபவர்கள், வங்கியிடம் தங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், வங்கி கணக்கு தொடர்பான பரிவர்த்தனை தகவல்களை குறுஞ்செய்தி வடிவில் தொடர்ந்து பெறலாம். அதே போல, டிஜிட்டல் சேவையை இயக்க வலுவான, ‘பாஸ்வேர்டு’ வைத்திருக்க வேண்டும்.


இரண்டு அடுக்கு பாதுகாப்பு:


பெரும்பாலான செயலிகளில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், ‘மால்வேர்’ போன்ற மோசடி செயலிகள், போனை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். போனில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இருப்பது அவசியம். சந்தேகமான இணைப்புகளை, ‘கிளிக்’ செய்வதை தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்டு விபரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.


கட்டுப்பாடுகள்:


பரிவர்த்தனைக்கான வரம்புகளை நிர்ணயித்துக்கொள்ளும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து பரிவர்த்தனைகளுக்குமான, ‘நோட்டிபிகேஷன்’ வசதியை இயக்கி கொள்ள வேண்டும். பொது இடங்களில் உள்ள, ‘வை-பை’ மையங்களில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது. மற்றவர்கள்ல, ‘கம்ப்யூட்டர்’களையும் தவிர்க்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)