பதிவு செய்த நாள்
25 செப்2020
04:27
சென்னை:சில்லரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள், கடன் மறுசீரமைப்புக்கான தகுதியை, இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதியை, பாரத ஸ்டேட் வங்கி எனும் எஸ்.பி.ஐ., அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவதை நோக்கமாக வைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, மறுசீரமைப்பு கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.சிரமங்கள் ஏதும் இல்லாமல் எளிதாக செயல்படுத்துவதற்காக, இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப, வீடு, அலுவலகம் உட்பட, எங்கிருந்தாலும், https://bank.sbi/ or https://sbi.co.in என்ற இணையதளம் வாயிலாக, தங்களது கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கான தகுதி இருக்கிறதா என, அறிந்து கொள்ள முடியும்.
கடன் பெற்றவர்கள், ஒன்று முதல், 24 மாதங்கள் வரை, அதனை தாமதமாகச் செலுத்த வேண்டுகோள் விடுக்க வாய்ப்பிருந்தால், கடனை திரும்ப செலுத்துவதற்கான கால நீட்டிப்பை பெறலாம்.கொரோனா தொற்றில் வருமான இழப்பு ஏற்பட்டிருந்தால் மற்றும் அவர்களது கணக்கு தரமானதாக வகைப்படுத்தப்பட்டிருந்தால் இதற்கான தகுதியைப் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|