புதிய பங்கு வெளியீட்டில் லிக்கிதா இன்பிராஸ்ட்ரக்சர்புதிய பங்கு வெளியீட்டில் லிக்கிதா இன்பிராஸ்ட்ரக்சர் ...  ஆறு வர்த்தக நாட்களில்  ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஆறு வர்த்தக நாட்களில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் இரண்டு முக்கிய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
04:35

புதுடில்லி:கேம்ஸ், ரூட் மொபைல், ஏஞ்சல் புரோக்கிங் உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய பங்குகள் வெளியீடு வெற்றியடைந்ததை தொடர்ந்து, மேலும் இரு நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
யு.டி.ஐ., – ஏ.எம்.சி.,நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான, யு.டிஐ., அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி, புதிய பங்கு வெளியீட்டுக்கு 29ம் தேதி வருகிறது.பங்கு வெளியீடு, 29ம் தேதி துவங்கி, அக்டோபர், 1ம் தேதியுடன் முடிவடைகிறது. துணிகர முதலீட்டாளர்களுக்கான ஏலம், 28ம் தேதி துவங்குகிறது

.பங்கு வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 552 – 554 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்துள்ளது, யு.டி.ஐ., – ஏ.எம்.சி.,இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 2,160 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பங்கு வெளியீட்டுக்கு வரும், முன்றாவது சொத்து மேலாண்மை நிறுவனமாகும் இது.
இதற்கு முன், நிப்பான் லைப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் எச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்தன.இந்த பங்கு வெளியீட்டின் போது, யு.டி.ஐ., ஏ.எம்.சி., நிறுவனம், அதன் பங்குதாரர்களின், 30.75 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.மேலும், நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, 2 லட்சம் பங்குகளை ஒதுக்கி, விற்பனை செய்ய உள்ளது.

மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

மும்பையைச் சேர்ந்த, கப்பல்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான, மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், 29ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இந்த பங்கு வெளியீடு, 29ம் தேதியன்று துவங்கி, அக்டோபர், 1ம் தேதியுடன் முடிகிறது.பங்குகளை விற்பதின் மூலம், அதிகபட்சமாக, 444 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.பங்கு வெளியீட்டின் போது ஒரு பங்கின் விலை, 135 – 145 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 3.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

யெஸ் செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், எடெல்வைஸ் பைனான்ஷியல், ஐ.டி.எப்.சி., செக்யூரிட்டீஸ் மற்றும் ஜெ.எம்., பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.இந்நிறுவனம், வர்த்தக ரீதியிலான கப்பல்களை தயாரிப்பதோடு, இந்திய கப்பற்படைக்கான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றையும் தயாரித்து, பராமரித்து வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)