பதிவு செய்த நாள்
25 செப்2020
04:37
மும்பை:தொடர்ந்து ஆறாவது நாளாக, நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.
கடந்த ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள், 11.31 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பை சந்தித்தனர்.நேற்று மட்டும், 3.95 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.நேற்றைய தினம் மட்டும், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், 1,115 புள்ளிகள் சரிந்தது.
உலகளவிலான சந்தைகளில் குறுகிய காலத்தில் அதிக பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவற்றின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தில், 1,114.82 புள்ளிகள் சரிந்து, 36,553.60 புள்ளிகளுக்கு கீழிறங்கியது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 326.30 புள்ளிகள் சரிவைக் கண்டு, வர்த்தகத்தின் முடிவில், 10,805.55 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்செக்ஸ் பிரிவில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தவிர மீதி அனைத்து பங்குகளும் சரிவைச் சந்தித்தன.இதில் இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகள் அதிக விலை சரிவை சந்தித்தன. இந்நிறுவன பங்குகள் விலை, 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.
இதனையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் அதிகளவில் விலை சரிந்தன. பொருளாதார மீட்சி குறித்த கவலைகள், மத்திய வங்கியின் புதிய நிதிஉதவிகள் இல்லாதது, ஆகியவை உலகளவில் அதிக பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் பிரதிபலித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|