சுணங்கினால் சுமை தான்;  கட்டத் துவங்குங்கள் இ.எம்.ஐ.,யை! சுணங்கினால் சுமை தான்; கட்டத் துவங்குங்கள் இ.எம்.ஐ.,யை! ...  லட்சுமி விலாஸ் வங்கி  புதிய இயக்குனர் குழு  நியமிக்க ரிசர்வ்வங்கி ஒப்புதல் லட்சுமி விலாஸ் வங்கி புதிய இயக்குனர் குழு நியமிக்க ரிசர்வ்வங்கி ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விருப்ப ஓய்வு பெறும் வசதியை முடிவு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2020
20:46

பொதுத்துறை நிறுவனங்கள் மூத்த ஊழியர்களுக்கு அவ்வப்போது ’வி.ஆர்.எஸ்.,’ எனும் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து வருகின்றன. தனியார் துறையிலும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதுக்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருந்தாலும், இந்த வசதியை பயன்படுத்திக்கொள்வதை சரியாக திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பிந்தைய காலத்திற்கான சரியான திட்டமிடலும் அவசியம். இதற்கு உதவும் அம்சங்களை பார்க்கலாம்:


என்ன பலன்?


விருப்ப ஓய்வு திட்டத்தை பயன்படுத்திக்கொள்வது என்பது முன்னதாகவே ஓய்வு பெறுவது போன்றது. எனினும், முன்னதாகவே பணியில் இருந்து விலகுவதால் கிடைக்க கூடிய பலன்களை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். மொத்தமாக கிடைக்கும் தொகை, பணியில் இருந்தால் கிடைக்க கூடிய தொகையுடன் எப்படி பொருந்துகிறது என பார்க்க வேண்டும்.


மற்ற பலன்கள்:


மொத்தமாக கிடைக்கும் தொகையைத்தவிர மற்ற பலன்களையும் பரிசீலிக்க வேண்டும். பணியில் இருக்கும் போது சம்பளம் தவிர மற்ற சலுகைகள் கிடைக்கும். ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றுக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வு பெறும் காலத்தில் அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றை எல்லாம் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.


வரி விதிப்பு:


விருப்ப ஓய்வு திட்ட பலனை கணக்கிடும் போது வரி விதிப்பு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விஆர்.எஸ்.,. தொகையில், 5 லட்சம் ரூபாய் வரை வரிவிதிப்பு இல்லை என்றாலும், அதற்கு மேலான தொகைக்கு வரி விதிப்பு பொருந்தும். மேலும், ஓய்வு பெற்ற ஆண்டுக்கு மட்டுமே இந்த விலக்கை கோர முடியும்.


திட்டமிடல்:


பலன்கள் சாதகமாக இருக்கும் போது விருப்ப ஓய்வு திட்டத்தை நாடலாம் என்றாலும், எதிர்காலத்திற்கு சரியாக திட்டமிட வேண்டும். ஓய்வு காலம் அதிகரிப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, மாற்று வேலை கிடைப்பதற்கான சாத்தியத்தையும் பரிசீலிக்க வேண்டும்.


முதலீடு:


இந்த திட்டம் மூலம் கிடைக்கும் தொகையை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த மூன்றாண்டுகள், ஏழு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் இலக்குகள் என பிரித்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். மாதாந்திர செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)