பதிவு செய்த நாள்
28 செப்2020
11:17
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 326.57 புள்ளிகள் உயர்ந்து 37,715.23ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 96.05 புள்ளிகள் உயர்ந்து 11,146.30ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.73.56ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.66 சதவீதம் குறைந்து 42.13 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|