பதிவு செய்த நாள்
28 செப்2020
22:49
புதுடில்லி:லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்த ஏழு இயக்குனர்களை, பங்குதாரர்கள் நீக்கிய நிலையில், வங்கியின் அன்றாட விவகாரங்களை கவனிப்பதற்காக, மூன்று பேர் கொண்ட இயக்குனர்கள் குழுவை நியமிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 25ம் தேதியன்று, வங்கியின் பங்குதாரர்கள், அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட ஏழு இயக்குனர்களை நீக்கி அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, 27ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, மூன்று சுயாதீன இயக்குனர்களை நியமித்தது. மீட்டா மாகான், சக்தி சின்ஹா, சதீஷ்குமார் கல்ரா ஆகிய மூன்று இயக்குனர்களை நியமித்து, இக்குழு, மீட்டா மாகான் தலைமையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வங்கி, சிறிய நடுத்தர வணிகங்களுக்கு கடன் வழங்குவதிலிருந்து தங்கள் பார்வையை பெரிய வணிகங்களுக்கு திருப்பியதிலிருந்து, பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|