பதிவு செய்த நாள்
28 செப்2020
23:11
மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது வர்த்தக நாளாக நேற்றும் உயர்வை சந்தித்தன.‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ குறியீடுகள், 1.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, நிதித் துறை பங்குகளில் அதிகளவு முதலீடு செய்யப் பட்டதாகும். பொதுத்துறை வங்கிகளுக்கு, அரசு மூலதன ஊக்கச் சலுகைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, வங்கி துறை பங்குகள் விலை அதிகரித்தன. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 592.97 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 37981.63 புள்ளிகளில் நிலை பெற்றது.
இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 177.30 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 11227.55 புள்ளிகளில் நிலைபெற்றது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் விலை, 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மாறாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், நெஸ்ட்லே ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|