பதிவு செய்த நாள்
29 செப்2020
21:24
புதுடில்லி:ஐதராபாதை சேர்ந்த, ‘சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 60 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் செபிக்கு தெரிவித்து உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 28.42 லட்சம் புதிய பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. ஒரு பங்கின் முகமதிப்பு, 10 ரூபாய் ஆகும்.
சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், மருந்து துறையில் பயன்படுத்தப்படும்,எம்.சி.சி., எனும், ‘மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ்’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, ஆலைகளின் விரிவாக்கத்துக்கும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டுக் கான பணிகளை, ‘சப்ரான் கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|