பதிவு செய்த நாள்
29 செப்2020
21:39
புதுடில்லி:அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறி, முழுக்க தனியார் நிறுவனமாக மாற முடிவு செய்திருக்கும் நிலையில், இதற்கு சந்தைகளின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்திருக்கிறது.
வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுவதற்கு, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து உள்ளன. கடந்த திங்கள் அன்று கடிதம் மூலமாக, இந்த இரண்டு சந்தைகளும் தங்களுடைய ஒப்புதலை தெரிவித்துள்ளன.
வேதாந்தா ரிசோர்சஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வேதாந்தா ஹோல்டிங்ஸ் மொரீஷியஸ் மற்றும் வேதாந்தா ஹோல்டிங்ஸ் மொரீஷியஸ் 2 ஆகியவையும், வேதாந்தா சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
வேதாந்தா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுவதற் கான திட்டத்துக்கான அனுமதியை, அதன் பங்குதாரர்களிடம்இருந்து பெற்றது.வேதாந்தா நிறுவனத்தின், 50.1 சதவீத பங்குகள் அதன் தாய் நிறுவனமான, வேதாந்தா ரிசோசர்ஸ் வசம் உள்ளன. தற்போது மீதம் இருக்கும், 49.9 சதவீத பங்குகளும் சந்தையிலிருந்து வாங்கப்பட இருக்கின்றன.
இதற்கு முன், லண்டன் பங்குச் சந்தையிலிருந்து, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனமும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2018 அக்டோபரில், பொது சந்தையிலிருந்த அனைத்து பங்கு களையும் கைப்பற்றி, லண்டன் பங்குச் சந்தையிலிருந்து அந்நிறுவனத்தை வெளியேற்றி, முழுக்க தனியார் நிறுவனமாக்கினார், அனில் அகர்வால்.லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம், வேதாந்தா ரிசோர்சஸ் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|