உலகளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் துவங்குகிறது உலகளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் துவங்குகிறது ...  ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு ...
ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி சம்பாத்தியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
21:59

புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு, 90 கோடி ரூபாய் வீதம் சம்பாதித்துஇருக்கிறார்.

ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருண் இந்தியா வெளியிட்டிருக்கும், இந்திய பணக்காரர்கள் 2020 பட்டியல் குறித்த அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மூன்று மடங்கு அதிகம்மேலும் தொடர்ந்து 9 வது ஆண்டாக, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் எனும் பட்டத்தை, முகேஷ் அம்பானி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவருடைய சொத்து மதிப்பு, 2.77 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 6.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக, உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை திரட்டிய நிலையில், அவர் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்களாக 828 பேர் உள்ளனர்.


ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.மேலும், 100 கோடி டாலருக்கும் அதிகமான, அதாவது இந்திய மதிப்பில், 7,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை, 179 ஆகும். இது, கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, முன்று மடங்கு அதிகரிப்பாகும்.


இடம்பெறவில்லை

மொத்தம் 828 பேர் கொண்ட இந்த பட்டியலில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 627 பேரின் சொத்துக்கள் அதிகரித்துள்ளன. 229 பேரின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. 75 பேர்கள், இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை. முந்தைய பட்டியலில் இடம்பிடித்திருந்தவர்களில் 6 பேர் மரணமடைந்துவிட்டனர்.

பெண்களைப் பொறுத்த வரை, 32 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா வி கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார்.இவரை அடுத்து, பயோகான் நிறுவனத்தை சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா, 31 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்த 828 பேர் பட்டியலில், 21 பேர், 40 வயதுக்கு கீழானவர்கள். இவர்களில், 17 பேர் சுயமாக சம்பாதித்து, முன்னுக்கு வந்தவர்கள்.பட்டியலில் இடம்பெற்றுள்ள, 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு, 60.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, இதற்கு முந்தைய ஆண்டைவிட, 10.29 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள்'

ஹுருண் இந்தியா பணக்காரர்கள் 2020' பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில், 13 பேர் அரசியல் சார்ந்தவர்கள். நடிகை ஜெயா பச்சன், மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர பிரசாத், ராகுல் பஜாஜ், மும்பை பா.ஜ.க., தலைவர் மங்கள் பிரபாத் லோதா உள்ளிட்ட, 13 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)