பதிவு செய்த நாள்
06 அக்2020
21:40
மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழுவின் கூட்டம், இன்று துவங்கி, 9ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த கூட்டம், கடந்த செப்டம்பர் மாதம், 28ம் தேதியன்று துவங்க வேண்டிய நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் கூட்டத்துக்கான தேதியை அறிவித்துள்ளது.கூட்டத்தை கூட்டுவதற்கு, குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களாவது தேவை என்ற நிலையில், மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட காரணத்தால், கூட்டத்தை, ரிசர்வ் வங்கியால் கூட்ட இயலவில்லை.
சேதன் காட், பாமி துவா மற்றும் ரவீந்திர தோலகியா ஆகியோரின், நான்காண்டு பதவிக்காலம் செப்டம்பர், 29 ம் தேதியுடன் முடிவடைகிற காரணத்தால், அப்போது கூட்டம் தள்ளி வைக்கப் பட்டதாக தெரியவந்தது.தற்போது, அஷிமா கோயல், ஜெயந்த் ஆர் வர்மா மற்றும் சஷங்கா பைடே ஆகிய மூன்று சிறந்த பொருளாதார வல்லுனர்களை, நிதிக் கொள்கை குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளது, மத்திய அரசு.வரும், 9ம் தேதியன்று, நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி வட்டி குறித்த அதன் முடிவை அறிவிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|