செப்டம்பரில் நம்பிக்கை தந்த சேவைகள் துறை வளர்ச்சி செப்டம்பரில் நம்பிக்கை தந்த சேவைகள் துறை வளர்ச்சி ...  ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம் ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம் ...
‘மியூச்சுவல் பண்டு’ துறையில் சொத்து மதிப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2020
21:48

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் பண்டு துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 12 சதவீதம் அதிகரித்து, 27.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு பங்குச் சந்தைகள் எழுச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மியூச்சுவல் பண்டு துறையில் இருக்கும், 45 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சராசரிசொத்து மதிப்பு, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 24.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில், 27.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான,‘ஆம்பி’ தெரிவித்து உள்ள தாவது:கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், முதல், 10 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக ஆக்சிஸ், யு.டி.ஐ., எஸ்.பி.ஐ., கோட்டக் ஆகிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 14 முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.


அனைத்து நிறுவனங்களின் ஒட்டு மொத்த சராசரி வளர்ச்சி, 12 சதவீதமாக உள்ளது.எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, செப்டம்பர் காலாண்டில், 15.6 சதவீதம் அதிகரித்து, 4.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 8 சதவீதம் சரிந்தது. இதற்கு கடன் மற்றும் பங்குகள் பிரிவில் அதிகளவில் பணம் வெளியே எடுக்கப்பட்டது காரணமாக அமைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)