பதிவு செய்த நாள்
24 அக்2020
22:17
மும்பை:வங்கி கடன் வளர்ச்சி, 5.66 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும்; வைப்புத் தொகை, 10.55 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 9ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 5.66 சதவீதம் அதிகரித்து, 103.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வைப்புத் தொகை, 10.55 சதவீதம் அதிகரித்து, 143.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபர், 11ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கி கடனுக்கான தொகை, 97.89 லட்சம் கோடி ரூபாயாகவும்; வைப்புத் தொகை, 129.38 கோடி ரூபாயாகவும் இருந்தன.
நடப்பு ஆண்டில், கடந்த செப்டம்பர், 25ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கி கடன் வளர்ச்சி, 5.15 சதவீதம் அதிகரித்து, 102.72 லட்சம் கோடி ரூபாயாகவும்; வைப்புத் தொகை, 10.51 சதவீதம் அதிகரித்து, 142.64 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவு பொருட்கள் அல்லாதவற்றுக்கான வங்கி கடன் வளர்ச்சி, 6 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 9.8 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில், தனி நபர் கடன், 10.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|