பதிவு செய்த நாள்
29 அக்2020
22:08
கோல்கட்டா,: நாட்டின் மிகப்பெரிய, ‘டிவி’ விற்பனையாளரான, ‘சாம்சங்’ நிறுவனம், வெளிநாட்டிலிருந்து டிவி இறக்குமதிக்கான உரிமத்தை பெற்றுள்ளது. இதன் மூலமாக, துறைமுகத்தில் அண்மைக் காலமாக தேங்கி இருக்கும், ஒரு லட்சம், ‘எல்.இ.டி., டிவி’களை இந்நிறுவனத்தால் மீட்டுக்கொள்ள முடியும்.
இது குறித்து, இத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.இ.டி., டிவி இறக்குமதிக்கான உரிமத்தை, சாம்சங் பெற்றுவிட்டதால், அந்நிறுவனம் நிம்மதி பெருமூச்சு விடலாம். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் எல்.இ.டி., டிவிகள் எடுக்க முடியாமல், துறைமுகத்தில் தேங்கி இருக்கின்றன.
இப்போது உரிமம் கிடைத்துவிட்ட காரணத்தால், தீபாவளி தேவையை சாம்சங் எளிதாக சமாளித்து விடலாம்.துறைமுகத்தில் தேங்கி இருக்கும் டிவிகளில் பெரும்பாலானவை, 55 அங்குல கியு.எல்.இ.டி., டிவிகளாகும். மத்திய அரசு, அதன் சுய சார்பு கொள்கையின் அடிப்படையில், டிவி இறக்குமதியில் பல கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும், சீனாவில்இருந்து அதிகளவில் இறக்குமதி ஆவதை தடுக்கவும், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, தயாரிப்பாளர்கள் டிவிகளை இறக்குமதி செய்ய, உரிமம் வாங்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டது.
சாம்சங் நிறுவனம், பெருமளவு டிவியை, வியட்னாமிலிருந்து இறக்குமதி செய்வதாலும், சென்னையில் தொழிற்சாலையை மீண்டும் துவங்க இருப்பதாக அரசுக்கு தெரிவித்ததாலும், உரிமம் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|