பதிவு செய்த நாள்
30 அக்2020
21:47
புதுடில்லி:மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டத்தை, மேலும் சில துறைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது என, நிடி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான,‘பிக்கி’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், காணொலி மூலம் பங்கேற்ற ராஜிவ் குமார், மேலும் கூறியுள்ளதாவது: தற்போது, குறிப்பிட்ட சில துறைகளுக்கு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம், 9 – 10 துறைகளுக்கு கொண்டு வரப்படும்.
அரசு ஏற்கனவே மருந்து, மருத்துவ சேவை, மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது, அதை மேலும் சில துறைகளுக்கு விஸ்தரிக்க அரசு விரும்புகிறது.இந்த ஊக்கச் சலுகை திட்டத்தின் மூலம், நிறுவனங்கள் உலகளவில் போட்டிகளை சமாளிக்க முடியும்.
அடுத்து, மின் வாகனங்களை அதிகரிக்கும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது. சாலைகளில் செல்லும் வாகனங்களில், 85 சதவீதம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தான். இவற்றை மின் வாகனங்களாக மாற்ற விரும்புகிறோம். இவற்றுக்கு சார்ஜ் ஏற்றுவது சம்பந்தமான விஷயங்கள் குறித்த முடிவுகள் எட்டப்பட்டு விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|