பதிவு செய்த நாள்
31 அக்2020
22:15
மும்பை:நடப்பு நிதியாண்டில், டிராக்டர் விற்பனை, 10 – 12 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்த் ரா’ தெரிவித்துள்ளது. அறுவடை நன்றாக இருக்கும் என்பதால், கிராமப் பகுதிகளில் வருமானம் அதிகரிக்கும்; இதன் தொடர்ச்சியாக, டிராக்டர் விற்பனையும் அதிகரிக்கும் என, இந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கிராமப் பகுதிகளில் அறுவடை நன்றாக இருக்கும் போது வருமானம் அதிகரிக்கும். மேலும், விளைச்சலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது காரணமாகவும், வருவாய் அதிகரிக்கும்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், டிராக்டர் விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்ச்சியாக, மூன்று அறுவடைக் காலங்கள் நன்றாக இருப்பதால், அடுத்த நிதியாண்டிலும் நன்றாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் விவசாய பொருட்களும் இருப்பதால், இத்துறையை தடை அதிகம் பாதிக்கவில்லை. மேலும், கொரோனா பரவலும் நகரங்களை விட கிராமங்களில் குறைவாக இருப்பதால், பணியாளர்கள் கிடைப்பதிலும் பிரச்னை எழவில்லை.இத்தகைய காரணங்களினால், இந்த நிதியாண்டில், டிராக்டர் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|