ரெப்கோ வீட்டு கடன் நிகர லாபம் ரூ.81 கோடி ரெப்கோ வீட்டு கடன் நிகர லாபம் ரூ.81 கோடி ... தொடர் சாதனையில் அன்னிய செலாவணி தொடர் சாதனையில் அன்னிய செலாவணி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வளர்ச்சி அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2020
22:34

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இதற்கு முன் கணித்திருந்ததை விட அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை.

எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், மைனஸ் 12.5 சதவீதமாக இருக்கும், என கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சாதகமான நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, வளர்ச்சி, மைனஸ் 10.7 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது.

தயாரிப்புத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள், மற்றும் உலக பொருளாதார நிலை ஆகியவற்றை சார்ந்த, 41 குறிகாட்டிகளை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.நாட்டின் பொருளாதாரம், கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.இன்னும் அந்த அச்சம் இருக்கிறது.


குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை, காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகஅளவில் இருந்துள்ளது. ஐந்தாம் கட்ட தளர்வுகள் மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை அடுத்து, இரண்டாவது அலை வர வாய்ப்பிருக்கிறது.


தடுப்பூசி எவ்வளவு விரைவில் வருகிறதோ, அதைப் பொறுத்தே, நுகர்வோர் நம்பிக்கையும் அதிகரிக்கும். இப்போதைய நிலவரப்படி, மூன்றாவது காலாண்டில் தான், நுகர்வோர் நம்பிக்கை முழுமையாக மீட்சியடையும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)