மின்னணு பொருட்கள் துறை 187 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது மின்னணு பொருட்கள் துறை 187 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது ...  தொழிலாளர்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் சற்று அதிகரிப்பு தொழிலாளர்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் சற்று அதிகரிப்பு ...
கோலோச்சும் ரொக்க புழக்கம் ஏ.டி.எம்., பயன்பாடு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2020
22:39

புதுடில்லி:ஏ.டி.எம்., மூலமாக, ரொக்கப் பணத்தை எடுப்பது, கொரோனா பாதிப்பால் ஆரம்பத்தில் சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரித்துள்ளது.

ஏ.டி.எம்., மூலமாக, ஒரு முறை எடுக்கப்படும் சராசரி தொகை, கடந்த ஆகஸ்டில், 4,959 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஒரு சாதனை அளவாகும்.இந்த மாதத்தில் தான், ரொக்கப் புழக்கம், 26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீதமாகும்.கொரோனா பாதிப்பின் ஆரம்பகட்டத்தில், ஏ.டி.எம்., மூலமாக பணம் எடுப்பது சற்று குறைந்தாலும், அதன்பின் கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிகரித்துவிட்டது என்கிறார்கள், வங்கி துறையினர்.

கடந்த அக்டோபரில், யு.பி.ஐ., மூலமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை, 200 கோடி என்ற உச்சத்தை தொட்டபோதிலும்கூட, ரொக்கப் புழக்கமே கோலோச்சி வருகிறது. இது குறித்து, ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ருஸ்டம் இரானி கூறியதாவது:

ரொக்கம் என்பது இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகும். மேலும், ஏ.டி.எம்.,கள் மக்கள், தங்களுடைய பணத்தை எளிதாக அணுக உதவுகிறது. கொரோனாவை தடுக்கும் விதமாக, நாடு முழுதும் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பரிவர்த்தனைகளில் கடும் சரிவு காணப்பட்டது. ஜூன் மாதத்திலிருந்து நிலைமை மெதுவாக மேம்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இவை ஒருபுறமிருக்க, மக்கள் சிறிய அளவிலான தொகையை, அதாவது, 100 ரூபாயிலிருந்து, 300 ரூபாய் வரை, ‘டிஜிட்டல்’ மூலமாக பரிவர்த்தனை செய்கிறார்கள்.மாறாக, பெரிய தொகையை, ஏ.டி.எம்., மூலமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறார்கள், ஏ.டி.எம்., பண சேவை நிறுவனத்தினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)