பதிவு செய்த நாள்
21 நவ2020
22:00
புதுடில்லி:உலகளவில், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனமான,
‘யுனிலீவர்’ அதன் புதிய, ‘மவுத் வாஷ் பார்முலா’வை, இந்தியாவில் அறிமுகம் செய்ய
இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட ஆய்வக முடிவுகளின் படி, இந்த மவுத்வாஷ் கொண்டு, 30 வினாடிகள் வாய்
கொப்புளித்தால், 99.9 சதவீத கொரோனா வைரஸ் குறைந்துவிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது யுனிலீவர்.இதையடுத்து, தொண்டையில் சேரும் வைரஸ்களை, இந்த மவுத்வாஷ் கொண்டு எளிதில் அகற்றிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கை கழுவுவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது போன்று, இந்த மவுத் வாஷ் மூலம் வாய் கொப்புளிப்பதும் முக்கியமான ஒன்றாகும் என்றும், தன்
அறிக்கையில் யுனிலீவர் கூறிஉள்ளது.யுனிலீவர் வாய் பராமரிப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு தலைவர் கிளின் ராபர்ட்ஸ், “இது கொரோனா வைரஸ் பரவு வதைத்
தடுப்பதற்கான ஒரு சிகிச்சை முறையோ அல்லது நிரூபிக்கப்பட்ட வழியோ அல்ல என்றாலும், எங்கள் ஆய்வக முடிவுகள் நம்பிக்கைக்குரியதாக இருக்கின்றன,’’ என,
தெரிவித்துள்ளார்.
யுனிலீவரின் இந்த தொழில்நுட்பம், இந்தியாவில் அதன் அங்கமான,
‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்’ மூலமாக, டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|