பதிவு செய்த நாள்
21 நவ2020
22:02
புதுடில்லி:இந்தியாவில், தன் வாடிக்கையாளர்களுக்கு, விற்பனைக்கு பிந்தைய சேவைகள் மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக, அமெரிக்க பைக் தயாரிப்பாளரான, ‘ஹார்லி டேவிட்சன்’ தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்திய நேரடி வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்த ஹார்லி டேவிட்சன், அதன் பைக் விற்பனைக்காக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வதாக தெரிவித்தது.ஒப்பந்தப்படி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹார்லி டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்வது, விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளும்.
மேலும், உதிரிபாகங்கள், வாகனம் ஓட்டும்போது பயன்படுத்தும் பொருட்கள்
ஆகியவற்றையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் முகவர்கள் மூலம் விற்பனை செய்யும்.இது குறித்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக
இயக்குனர் சஞ்சீவ்ராஜசேகரன் கூறியதாவது:
நிறுவனம், இந்தியாவில் அதன் வணிக மாதிரியை மாற்றிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, இந்தியாவில் எங்கள் பயணத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் தொடர
உள்ளோம்.உதிரிபாகங்கள் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவைகள், உத்தரவாதம்
ஆகியவை, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் துவங்கும்.இவ்வாறு அவர்கூறினார்.
இதற்கிடையே, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, ஹார்லி டேவிட்சன் தன்னிச்சையாக
இந்தியாவிலிருந்து வெளியேறியதை அடுத்து, தங்களுக்கு, 130 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறி, அதன் முகவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|