ரியல் எஸ்டேட் துறைக்கு அணில் போன்று உதவி!ரியல் எஸ்டேட் துறைக்கு அணில் போன்று உதவி! ... சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம்! சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம்! ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீட்டு மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
22:15

கொரோனா பாதிப்பு சூழலில், வீட்டிலிருந்தே பணி புரிவது இயல்பாகி உள்ள நிலையில், பலரும் நகருக்கு வெளியே வீடுகளை நாடத் துவங்கியுள்ளனர். மேலும், பெரிய அளவிலான வீடுகளையும் விரும்புகின்றனர். இதற்கு மனை வாங்கி வீடு கட்டுவது ஏற்றதாக இருக்கிறது. இதன் காரணமாக, சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், வீட்டு மனைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வீட்டு மனை வாங்குவதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது.


அதிக வசதி:


அடுக்குமாடி குடியிருப்புகளை விட, மனை வாங்கி வீடு கட்டும் போது, நம் விருப்பத்தின்படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்வதும் எளிது. பணிகள் தாமதமாகி, வீடு ஒப்படைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இல்லை. கையில் இருக்கும் நிதிக்கு ஏற்ப கட்டிக் கொள்ளலாம்.


உயரும் மதிப்பு:


வீட்டு மனைகளின் மதிப்பு காலப்போக்கில் உயரும் தன்மை கொண்டது. முதலீடு நோக்கில் பார்த்தால், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட, வீட்டு மனை அதிக பலன் தரக்கூடியது. அடுக்குமாடி குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு பிறகு தேய்மானத்தை சந்திக்கும். விற்க விரும்பினால், உடனடியாக விற்பது கடினமாகலாம்.


நிதி ஆதாரம்:


அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவது எனில், வீட்டுக்கடன் எளிதாக கிடைக்கும் என்பதால் நிதி திரட்டுவது பிரச்னையாக இருக்காது. வீட்டு மனை வாங்க கடன் கிடைக்கும் என்றாலும், வாய்ப்புகள் குறைவு. மேலும், மனை மதிப்பிற்கு ஏற்ப கடன் கிடைக்காது. கையில் இருந்து கணிசமாக பணம் போட வேண்டும்.


வரி சலுகை:


மனை வாங்க வங்கிக் கடன் வாங்கினால், அதன் மீது வரிச் சலுகை கோர முடியாது. மனையில் வீடு கட்ட கடன் வாங்கினால் வரிச் சலுகை பொருந்தும் என்றாலும், வீடு கட்டி முடிக்கப்பட்ட பின் தான் இதை பெற முடியும். வீட்டுக்கடன் எனில், வருமான வரிச் சலுகை கோர முடியும்.


பத்திர விபரங்கள்:


சொந்த வீடு வாங்குவது போலவே, மனை வாங்கும் போதும், பத்திர விபரங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாங்க இருக்கும் மனை தொடர்பான பத்திர விபரங்களை சட்டரீதியாக பரிசீலிக்க வேண்டும். பல்வேறு வகையான அனுமதிகள் தொடர்பாகவும் கவனிக்க வேண்டும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)