பதிவு செய்த நாள்
01 டிச2020
22:17
புதுடில்லி:தொடர்ந்து, இரண்டாவது மாதமாக, நவம்பர் மாதத்திலும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., வசூல், அரசின் இலக்குக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், முதன் முறையாக, கடந்த அக்டோபர் மாதத்தில், 1.05 லட்சம் கோடி
ரூபாயாக உயர்ந்தது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது மாதமாக, நவம்பரில் வசூல்,
1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, 1.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நவம்பரில் வசூல், 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த, 2019 நவம்பரில் வசூல், 1.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த நிதியாண்டில்,
12 மாதங்களில், எட்டு மாதங்களில் வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, வரி வசூல் குறைந்து போனது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|