பதிவு செய்த நாள்
02 டிச2020
22:11
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., எனும், சீரான முதலீட்டு திட்டத்தின் கீழ், கடந்த, 6 மாதங்களுக்குப் பிறகு, முதன் முறையாக, அக்டோபரில் முதலீடு அதிகரித்துள்ளது.
எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ், அக்டோபரில், 7,800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள்
மேற்கொள்ளப் பட்டுள்ளன.கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, இத்திட்டத்தின் கீழ்
முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்ந்து குறைந்து வந்தது.
இந் நிலையில், அக்டோபரில் முதன் முறையாக முதலீடு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், இத்திட்டத்தின் கீழ், மொத்தம், 55 ஆயிரத்து, 627 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக, பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டு வருவதை அடுத்து, மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு அதிகரித்துள்ளது என்கிறார்கள், நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|