பதிவு செய்த நாள்
05 டிச2020
20:47
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், இந்த மாத இறுதியில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அமிதாப் பானர்ஜி கூறியிருப்பதாவது:
பங்கு வெளியீட்டு வருவதற்கான செபியின் அனுமதி விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அப்படி அனுமதி பெற்றுவிடும் பட்சத்தில், இம்மாத இறுதியிலேயே பங்கு வெளியீட்டுக்கு வந்துவிட திட்டமிட்டுள்ளோம். அப்படி இல்லாதபட்சத்தில், ஜனவரி முதல் வாரத்தில் வந்துவிடுவோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.எப்.சி., பங்கு வெளியீட்டின் மூலம், 4,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|