கை நிறைய பணத்துடன்  காத்திருக்கும் சீன நிறுவனங்கள் கை நிறைய பணத்துடன் காத்திருக்கும் சீன நிறுவனங்கள் ...  நன்றாக வாங்கி சாப்பிடுங்க ஸொமேட்டோ அதிகாரி கடிதம் நன்றாக வாங்கி சாப்பிடுங்க ஸொமேட்டோ அதிகாரி கடிதம் ...
கெய்ர்ன் தொடர்ந்த வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2020
22:40

புதுடில்லி:வரி சம்பந்தமான பிரச்னையில், வோடபோனுக்கு அடுத்து,‘கெய்ர்ன்’ நிறுவனத்துடனான வழக்கிலும், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான, ‘கெய்ர்ன் எனர்ஜி’ உடனான வழக்கில், இந்தியா, அந்த நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 360 கோடி ரூபாயை, சேதாரமாக வழங்க வேண்டும் என, சர்வதேச நடுவர் மன்றம் கூறியுள்ளது.

கடந்த, 2006 – 07ம் ஆண்டில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், ‘கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளை, ‘கெய்ர்ன் இந்தியா’ நிறுவனத்துக்கு மாற்றியது. இதனால், கெய்ர்ன் நிறுவனம் மூலதன ஆதாயத்தை அடைந்திருப்பதாகவும், அதற்கு 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாயை, வரியாகச் செலுத்த வேண்டும் என்றும் வரித் துறை கூறியது.ஆனால், கெய்ர்ன் நிறுவனம், வரி கட்ட மறுத்து விட்டது. இது சம்பந்தமான வழக்கு, இன்னும் டில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 2011ல், கெய்ர்ன் எனர்ஜி அதன் பெரும்பான்மையான இந்திய வணிகத்தை, வேதாந்தாவுக்கு விற்றுவிட்டது. ஆனால், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, வருமான வரித்துறை தடுத்து, அந்த பங்குகளை விற்பனையும் செய்துவிட்டது.இதை அடுத்து, வழக்கு, சர்வதேச நடுவர் மன்றத்துக்கு சென்றது. அங்கு,‘இந்தியாவின் கோரிக்கை செல்லாது; இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இது மீறுவதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த, வோடபோன் குழுமம், இந்தியாவுக்கு எதிரான, 22 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் வரி குறித்த வழக்கில் வெற்றி பெற்றது. இப்போது, கெய்ர்ன் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)