பதிவு செய்த நாள்
23 டிச2020
22:40
புதுடில்லி:வரி சம்பந்தமான பிரச்னையில், வோடபோனுக்கு அடுத்து,‘கெய்ர்ன்’ நிறுவனத்துடனான வழக்கிலும், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான, ‘கெய்ர்ன் எனர்ஜி’ உடனான வழக்கில், இந்தியா, அந்த நிறுவனத்துக்கு, 10 ஆயிரத்து, 360 கோடி ரூபாயை, சேதாரமாக வழங்க வேண்டும் என, சர்வதேச நடுவர் மன்றம் கூறியுள்ளது.
கடந்த, 2006 – 07ம் ஆண்டில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், ‘கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளை, ‘கெய்ர்ன் இந்தியா’ நிறுவனத்துக்கு மாற்றியது. இதனால், கெய்ர்ன் நிறுவனம் மூலதன ஆதாயத்தை அடைந்திருப்பதாகவும், அதற்கு 10 ஆயிரத்து, 247 கோடி ரூபாயை, வரியாகச் செலுத்த வேண்டும் என்றும் வரித் துறை கூறியது.ஆனால், கெய்ர்ன் நிறுவனம், வரி கட்ட மறுத்து விட்டது. இது சம்பந்தமான வழக்கு, இன்னும் டில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 2011ல், கெய்ர்ன் எனர்ஜி அதன் பெரும்பான்மையான இந்திய வணிகத்தை, வேதாந்தாவுக்கு விற்றுவிட்டது. ஆனால், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, வருமான வரித்துறை தடுத்து, அந்த பங்குகளை விற்பனையும் செய்துவிட்டது.இதை அடுத்து, வழக்கு, சர்வதேச நடுவர் மன்றத்துக்கு சென்றது. அங்கு,‘இந்தியாவின் கோரிக்கை செல்லாது; இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இது மீறுவதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த, வோடபோன் குழுமம், இந்தியாவுக்கு எதிரான, 22 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் வரி குறித்த வழக்கில் வெற்றி பெற்றது. இப்போது, கெய்ர்ன் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|