பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:35
*பொதுத்துறை வர்த்தக நிறுவனமான, எம்.எம்.டி.சி.,யின் ஊழியர்களுக்கு, சுய விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், இழப்பீடு வழங்குவதற்கான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது, வர்த்தக அமைச்சகம்.
*டாடா மோட்டார்ஸ் நிறுவனம், விற்பனையை அதிகரிக்க, கர்நாடக வங்கியுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு கடன்உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
*போர்டு இந்தியா, அதன், எஸ்.யு.வி., காரான, எகோஸ்போர்ட் வாகனத்தின், மேம்படுத்தப்பட்ட, 2021ம் ஆண்டு மாடலை, 7.99 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
*கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், ஒரு பங்குக்கு, ஒன்பது ரூபாய் ஈவுத் தொகை வழங்க இருப்பதாக, அதன் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
*பெங்களூரு நகரில், மின் வினியோக முறையை நவீனமாக்கவும், மேம்படுத்தவும், 730 கோடி ரூபாயை, ஆசிய மேம்பாட்டு வங்கி கடனாக வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|