பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:49
புதுடில்லி: பிரிட்டனைச் சேர்ந்த, 'ஐ.எச்.எஸ்., மார்கிட்' எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், டிசம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நவம்பர் மாதத்தில், 56.3 புள்ளிகளாக இருந்தது.
பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.இதையடுத்து, டிசம்பரில் தயாரிப்பு துறையின் உற்பத்தி செயல்பாடுகள் வலுவடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் தேவைகள் அதிகரித்தது, இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும், இந்திய பொருட்களுக்கான சர்வதேச தேவையும், டிசம்பரில் உயர்ந்துள்ளது. ஆனால், கொரோனாவால் புதிய ஏற்றுமதி, 'ஆர்டர்'கள் மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன.மேலும், வேலைவாய்ப்பை பொறுத்தவரை, டிசம்பரில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|