பதிவு செய்த நாள்
07 ஜன2021
22:08
புதுடில்லி:வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தி இருப்பதாக, உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்து உள்ளதாவது:
நேரடி துறைமுக வினியோகம் மற்றும் நேரடி துறைமுக நுழைவு வசதிகள், இடர் மேலாண்மை அமைப்பு, சுங்க நுழைவை மின்னணுமயமாக்கியது, ஒற்றைச் சாளர வசதிகள்
என பல வர்த்தக வசதிகளை, 2015 முதல், இந்தியா அறிமுகம் செய்து வந்துள்ளது.
மேலும், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, அவை அப்படியே தொடர்ந்து வருகின்றன.உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டையும்
ஊக்குவிக்கும் வகையில், நேரடி மானியங்கள், விலை ஆதரவு திட்டங்கள், கட்டண
சலுகைகள், விருப்பமான வட்டி விகிதங்கள் என, பல சலுகைகளை தொடர்ந்து அளித்து
வருகிறது.
வளர்ந்த நாடுகள், இந்தி யாவில் வேளாண் துறையில் அதிக தாராளமயமாக்கத்தை
விரும்புகின்றன. மேலும், சர்வதேச தரத்துக்கு இணையாக, தரத்தை உயர்த்துமாறும்
கோருகின்றன.இவ்வாறு உலக வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|