பதிவு செய்த நாள்
16 ஜன2021
20:49
புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், அடுத்த இரண்டு காலாண்டுகளில், 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, இந்நிறுவனம், இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் விஜயகுமார் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த டிசம்பர் காலாண்டில், 6,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த நான்கு முதல், ஆறு மாதங்களில், 20 ஆயிரம் புதியவர்கள் மற்றும் அனுபவம் மிக்கவர்களை பணியில் அமர்த்த வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நிறுவனம், உள்ளூர் நபர்களையே அதிகம் பணியில் அமர்த்தி வருவதால், விசா உள்ளிட்ட பிரச்னைகள் பெரிதாக இல்லை. உள்ளூர் ஆட்களை பணியில் அமர்த்துவது, 67 சதவீதத்திலிருந்து, தற்போது, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|