பதிவு செய்த நாள்
16 ஜன2021
21:14
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதற்கு முதலீட்டாளர்கள் முன் ஒப்புதல் கட்டாயமாக்கப்படக் கூடாது என்றும்; அது குறித்த முடிவை, நிர்வகிப்பவர்களே மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்றும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.
பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், திடீரென அதன், 6 மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்தது. இது குறித்து, முதலீட்டாளர்களிடம் எந்த விதமான ஒப்புதலும் கோரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து, தற்போது, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சிறப்பு மனு மூலம், முதலீட்டாளர்களின் முன் ஒப்புதல் தேவையில்லை என, ஆம்பி தெரிவித்துள்ளது.முதலீட்டாளர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் மியூச்சுவல் பண்டுகளில் தங்களது பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
உத்தரவாதமான வருமானம் இல்லாமலும்; சந்தை ஆபத்துக்களுக்கு உட்பட்டதுமாக முதலீடுகள் இருக்கும் நிலையில், அவற்றை நிர்வகிப்பவர்கள் எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும் என்று ‘ஆம்பி’ தெரிவித்து உள்ளது.
அதிலும், கொரோனா போன்ற எதிர்பாராத கட்டங்களில் முதலீட்டாளர்களின் நலனை காக்கும் வகையில் முடிவு எடுப்பது, மற்றவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இத்திட்டங்களை நிறுத்துவது குறித்து, முதலீட்டாளர் களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதை தங்களிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.இதனையடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்று, நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நாளை மீண்டும் விசாரணை துவங்குகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|