மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து ...  ஆன்லைனில் காப்பீடு பெறுவதில் ஆர்வம் ஆன்லைனில் காப்பீடு பெறுவதில் ஆர்வம் ...
வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2021
22:03

வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது அவசியம்.


பொதுவாக வருமான வரி திட்டமிடலை, நிதியாண்டின் துவக்கத்திலேயே மேற்கொள்வது சிறந்தது. முன்னதாக திட்டமிடும் போது, வரி சேமிப்பு நோக்கிலான முதலீடுகளை நன்றாக ஆராய்ந்து தேர்வு செய்ய முடியும் என்பதோடு, முதலீட்டிற்கு தேவையான தொகையையும் திட்டமிடுவது சாத்தியம்.கடைசி நேரத்தில் திட்டமிடும் போது, அவசரத்தில் பொருத்தமில்லாத வரி சேமிப்பு வாய்ப்புகளை தேர்வு செய்ய நேரலாம். மேலும், வரி சேமிப்பிற்கான முதலீடு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதும் முக்கியம். நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உருவாக்கிக் கொள்ள, இது மிகவும் அவசியம்.


வரி சலுகை பிரிவு


வருமான வரி திட்டமிடலில், இன்னொரு முக்கிய அம்சமும் இருக்கிறது. வரி சலுகைக்கு பொருந்தக்கூடிய அனைத்து விதமான வாய்ப்புகளையும் அறிந்திருப்பதாகும். வரி சலுகைக்கான சேமிப்பு என்று வரும் போது, வருமான வரி சட்டம் – 80சி பிரிவு பரவலாக அறியப்பட்டதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் இருக்கிறது.


இந்த பிரிவின் கீழ், பொருத்தமான முதலீடுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி சலுகை கோரலாம். வீட்டுக்கடன் வட்டி, பி.பி.எப்., முதலீடு உள்ளிட்ட பல வாய்ப்புகள் இந்த பிரிவின் கீழ் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. என்.பி.எஸ்., எனும் தேசிய பென்ஷன் திட்ட முதலீட்டிற்கான தொகையும் இந்த பிரிவின் கீழ் வருகிறது.எனினும், 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இத்திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டிற்கு, இந்த பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.


இந்த பிரிவின் கீழ் பலன் பெற, பி.பி.எப்., போன்ற வழக்கமான முதலீடுகள் ஏற்றதா அல்லது சம பங்கு சார்ந்த முதலீடுகள் ஏற்றதா எனும் கேள்வியை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும் என்பதோடு, வரி சலுகைக்கு பொருத்தமான மற்ற பிரிவுகளையும் மனதில் கொள்ள வேண்டும்.


மருத்துவ காப்பீடு


கொரோனா பாதித்துள்ள தற்போதைய சூழலில், மருத்துவ காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவ காப்பீடு பாலிசிக்காக செலுத்தப்படும் பிரிமியம் தொகை, 80டி பிரிவின் கீழ் வரி சலுகைக்கு உரியது என்பதை அறிய வேண்டும்.


பாலிசி பெறுபவரின் வயது மற்றும் குடும்பத்தின் அளவிற்கு ஏற்ப, இந்த பிரிவின் கீழ் பிடித்தம் கோரலாம்.காப்பீடு பிரிமியம் தொகைக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் கோரலாம். மருத்துவ பரிசோதனைக்கான தொகையும் இதில் அடங்கும். மேலும், பெற்றோருக்கான காப்பீடு பிரிமியத்திற்கும் சலுகை பெறலாம்.


பெற்றோருக்கான மருத்துவ செலவுக்கு என, 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகையும் கோரலாம்.இது தவிர, 80டிடி பிரிவின் கீழ், மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கான மருத்துவ செலவையும் பிடித்தமாக கோரலாம். மேலும், 80இ பிரிவின் கீழ், கல்விக் கடன் மூலம் வரி சலுகை பெற முடியும். யாருடைய பெயரில் கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவர் வரி சலுகை பெறலாம்.எனினும் அனைத்து கல்விக் கடன்களுக்கும் இது பொருந்தாது.


குறிப்பிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கே பொருந்தும். கடன் மீதான வட்டிக்கு மட்டுமே சலுகை பொருந்தும் என்பதையும் கவனிக்க வேண்டும். வங்கி சேமிப்பு கணக்கு வட்டிக்கும், 10 ஆயிரம் ரூபாய் வரை வரி சலுகை பொருந்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)