பதிவு செய்த நாள்
22 ஜன2021
21:49
புதுடில்லி:இந்தியாவில், வீட்டு உபரி சேமிப்பானது பிரமிப்பூட்டும் வகையில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என, தரகு நிறுவனமான, யு.பி.எஸ்., தெரிவித்துள்ளது.
மேலும் அது தெரிவித்துள்ளதாவது:வீட்டு சேமிப்பு 2014ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டின் மத்தி வரையில் குறைந்து வந்தது. இதற்கு காரணம் பொருட்களை வாங்குவது உள்ளிட்டவற்றில், மக்கள் அதிகம் செலவழிக்க துவங்கியது தான். ஆனால், கடந்த ஆண்டில், வீட்டின் உபரி சேமிப்பு, 14.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதில், ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த சேமிப்பின் பெரும்பகுதி, ரொக்கமாக மட்டுமே இருப்பதாகும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் இது, 135 சதவீதமாக அதிகரித்துள்ளது.வங்கி, இன்ஷூரன்ஸ், ஓய்வு திட்டங்கள் மூலமான குடும்பத்தினரின் சேமிப்பு, 14 சதவீதம் அளவில் மட்டுமே இருக்கிறது. பங்குச் சந்தையில், 5 சதவீதம் அளவுக்கும் குறைவாகவே இருக்கிறது.
குடும்பத்தினரின் சேமிப்பானது, நாட்டின் மொத்த மூலதன உருவாக்கத்தில், 58 சதவீதமாக உள்ளது. இதுவே, கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பு, 32 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|