பதிவு செய்த நாள்
23 ஜன2021
21:39
புதுடில்லி:இந்த மாதத்தில் மட்டும், இதுவரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, 1.9 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதியிலிருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.இந்த மாதத்தில் மட்டும், மும்பை பங்குச் சந்தை, 20 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், அதன் குறியீட்டு எண் சென்செக்ஸ், 50 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இந்த காலகட்டத்தில், 44 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை பெற்றிருக்கிறார்கள்.பொருளாதார தரவுகள் மேம்பட்டு வருவது, கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது, தடுப்பூசி அறிமுகம் ஆகியிருப்பது ஆகியவை காரணமாக, பிற நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் வந்துள்ளன.
எதிர்பார்ப்பை மீறி, அதிக லாபம் தரத் தக்கவையாக இந்திய பங்குச் சந்தைகள் இருப்பதால், அன்னிய முதலீடுகள் அதிகம் வருகின்றன.வளர்ந்துவரும் நாடுகளில், இந்திய சந்தைகளே அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|