பதிவு செய்த நாள்
23 ஜன2021
23:18
புதுடில்லி:அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பைடன் பதவி ஏற்றிருக்கும் நிலையில், புதிதாக ஒரு பிரச்னை கிளம்பி இருக்கிறது.
பிரச்னை, இம்முறை இரண்டு கட்சிகளுக்கு இடையே அல்ல. இரு நிறுவனங்களுக்கு இடையே. ‘பெப்சிகோ’ நிறுவனத்துக்கும், ‘கோக கோலா’ நிறுவனத்துக்கும் இடையே, மீண்டும் உரசல்கள் உருவாகி இருக்கின்றன.அதிபரின் மேஜையில், இதுநாள் வரை இருந்த, சிவப்பு நிற பட்டன் இப்போது அகற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டிரம்ப், தனக்கு எப்போதெல்லாம், ‘டயட் கோக்’ தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சிவப்பு நிற பட்டனை அழுத்துவார். உடனே, ‘கோக்’ வந்து சேரும். தற்போது, பைடன் பதவியேற்றிருக்கும் நிலையில், மேஜையிலிருந்த பட்டன் அகற்றப்பட்டு உள்ளது.
இதை அறிந்த பெப்சிகோ, ‘அதிபர் ஒருவேளை பெப்சி மாதிரியான நபராக இருப்பாரோ’ என டுவீட் செய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, அதிபர் கோக் பட்டனை நீக்கியது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதற்கு, ‘கோக கோலா’ என்ன பதிலடி தரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|