பதிவு செய்த நாள்
28 ஜன2021
00:20
புதுடில்லி:டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்ட்டன்ஸி சர்வீசஸ்’ நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு, கடந்த ஆண்டில், 1.4 பில்லியன் டாலர், அதாவது, 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக, ‘பிராண்டு பைனான்ஸ் 2021’ எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:டி.சி.எஸ்., நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு, ஒரே ஆண்டில், 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுவும், கொரோனாவால் உலகமே பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில், முதலிடம் எட்டப்பட்டுஉள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த, 25 நிறுவனங்களில், அதிக பிராண்டு மதிப்பு வளர்ச்சி பெற்ற நிறுவனமாகவும், டி.சி.எஸ்., உள்ளது.
இதனையடுத்து, உலகஅளவிலான, டாப் 25 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், பிராண்டு மதிப்பில், மூன்றாவது இடத்தை டி.சி.எஸ்., பெற்றுள்ளது.முதல் இரண்டு இடங்களை முறையே, ஐ.பி.எம்., நிறுவனமும், அக்செஞ்சர் நிறுவனமும் பிடித்துள்ளன.மேலும், ‘பிராண்டு கார்டியன்ஷிப் இண்டெக்ஸ் 2021’ பட்டியலில் முதல், 100 பேர்களில், டி.சி.எஸ்., நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், ஆறாவது இடத்தை, முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா, முதலிடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|