பதிவு செய்த நாள்
25 பிப்2021
21:12
மும்பை:கட்டுமான பொருட்களை, ஆன்லைனில் விற்பனை செய்து வரும், ‘இன்ப்ரா டாட் மார்க்கெட்’ நிறுவனம், ‘யுனிகார்ன்’ நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் மதிப்பு, 100 கோடி டாலருக்கு மேல் இருந்தால், யுனிகார்ன் நிறுவனம் என்று கருதப்படும். அதாவது, இந்திய மதிப்பில், 7,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டதாக அந்நிறுவனம் இருக்க வேண்டும்.அந்த வகையில், இன்ப்ரா டாட் மார்க்கெட் தற்போது, ‘யுனிகார்ன் கிளப்’பில் இணைந்துள்ளது.
தானேவை சேர்ந்த இந்த நிறுவனம், 2016ம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஆன்லைனில், கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பெரும்பாலும், சொந்த பிராண்டு பொருட்களையே விற்பனை செய்கிறது.கடந்த ஆண்டில் மட்டும், 12 யுனிகார்ன் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகி இருக்கின்றன.நடப்பு ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டில், யுனிகார்ன் அந்தஸ்து பெற்றிருக்கும் முதல் நிறுவனம், இன்ப்ரா டாட் மார்க்கெட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|