முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை ...  ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கு விரிவான மின்னணு கொள்கை ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கு விரிவான மின்னணு கொள்கை ...
‘ஆப்பிள்’ வாங்கிய 100 நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
21:28

புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கி இருப்பதாக, அதன் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், அண்மைக் காலமாக, சிறிதும் பெரிதுமான, பல நிறுவனங்களை கையகப் படுத்தி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை, சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களாகும் அல்லது ஆப்பிள் தயாரிப்புக்கு உதவக்கூடிய புதுமையான தயாரிப்புகளை கொண்டிருந்த நிறுவனங்களாகும்.

உதாரணமாக, இஸ்ரேலை சேர்ந்த, ‘பிரைம்சென்ஸ்’ எனும், ‘3டி சென்ஸிங்’ நிறுவனத்தை வாங்கியது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான், ஆப்பிள் பேஸ் ஐ.டி., உருவாக்கப் பட்டது.ஆப்பிள் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய நிறுவனம், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ ஆகும். கிட்டத்தட்ட, 3 பில்லியன் டாலர், அதாவது, 21 ஆயிரத்து, 900 கோடி ரூபாயில் இந்த நிறுவனத்தை வாங்கியது.

கடந்த ஆண்டில், பல செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட, 150 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த நிறுவனங்களை மட்டுமே கையகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)