பதிவு செய்த நாள்
25 பிப்2021
21:28
புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கி இருப்பதாக, அதன் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம், அண்மைக் காலமாக, சிறிதும் பெரிதுமான, பல நிறுவனங்களை கையகப் படுத்தி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை, சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களாகும் அல்லது ஆப்பிள் தயாரிப்புக்கு உதவக்கூடிய புதுமையான தயாரிப்புகளை கொண்டிருந்த நிறுவனங்களாகும்.
உதாரணமாக, இஸ்ரேலை சேர்ந்த, ‘பிரைம்சென்ஸ்’ எனும், ‘3டி சென்ஸிங்’ நிறுவனத்தை வாங்கியது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான், ஆப்பிள் பேஸ் ஐ.டி., உருவாக்கப் பட்டது.ஆப்பிள் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய நிறுவனம், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ ஆகும். கிட்டத்தட்ட, 3 பில்லியன் டாலர், அதாவது, 21 ஆயிரத்து, 900 கோடி ரூபாயில் இந்த நிறுவனத்தை வாங்கியது.
கடந்த ஆண்டில், பல செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட, 150 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த நிறுவனங்களை மட்டுமே கையகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|