பதிவு செய்த நாள்
25 பிப்2021
21:30
புதுடில்லி:ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து, விரிவான மின்னணு வர்த்தக கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, ‘நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது:ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையிலான, விரிவான மின்னணு வர்த்தக கொள்கை, மார்ச் அல்லது ஏப்ரலில் தயாராகி விடும் என, எதிர்பார்க்கிறோம். இது குறித்து, அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்த விரிவான கொள்கை உருவாக்கம் குறித்து, தபால் துறை, ரிசர்வ் வங்கி, சுங்க இலாகா ஆகியவற்றுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.இதன் மூலம் ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு, ‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை வழங்குவது மேலும் எளிதாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|