பெட்ரோல் விலை அதிகரித்தாலும் பெட்ரோல் கார்கள் விற்பனை அதிகரிப்பு பெட்ரோல் விலை அதிகரித்தாலும் பெட்ரோல் கார்கள் விற்பனை அதிகரிப்பு ...  ‘ஆல் நியூ ஐ20’க்கு சிறந்த கார் விருது ‘ஆல் நியூ ஐ20’க்கு சிறந்த கார் விருது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
25 ஆண்டுகளில் 90 லட்சம் கார்கள் அபார வளர்ச்சியில் ஹூண்டாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
21:00

சென்னை:இந்தியாவில் கால்பதித்து, 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 90 லட்சம் கார்களை தயாரித்து, அபார வளர்ச்சியை அடைந்துள்ளது,
‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம். தென் கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில், 1996ல், தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது. 1998ல் முதல் காரானா, ‘ஹூண்டாய் சான்ட்ரோ’வை அறிமுகம் செய்தது. அதன் பின், ‘ஆக்சென்ட்’ என்ற ‘செடான்’ வகை காரை, 1999ல் அறிமுகம் செய்தது.

தொடர்ந்து பல்வேறு கார்களை அறிமுகம் செய்த ஹூண்டாய், தற்போது, இந்தியாவிலேயே அதிக கார் தயாரிக்கும் நிறுவனங்களில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2021 ஜனவரி நிலவரப்படி, இந்திய கார் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு, 17 சதவீதம் ஆகும். மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில், தொடர்ந்து முதல் இடத்தை வகிக்கிறது.

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, லத்தீன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட, 88 நாடுகளுக்கு, சென்னையில் இருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.‘சான்ட்ரோ, கிரான்டு ஐ.10 – எலைட் ஐ.20, ஆரா, வென்யூ, கிரெட்டா, எலக்ட்ரிக் கார் கோனா’ உட்பட, ஒன்பது மாடல் கார்களை இதுவரை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த, 25 ஆண்டுகளில், 90 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 30 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும், 61 ஆயிரத்து, 800 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை 26.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும், இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களுக்காக, 25வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஏழு இருக்கைகள் கொண்ட ‘அல்கசர்’ என்ற, பிரீமியம் எஸ்.யு.வி., ரக கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக, நான்கு ஆண்டுகளில், 3,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், குறைந்த விலையில், உள்நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களை, 1,000 கோடி ரூபாயில் தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)