பதிவு செய்த நாள்
04 மார்2021
21:00
புதுடில்லி:‘பாலிசிபஜார் டாட் காம்’ நிறுவனம், அடுத்த, 12_15 மாதங்களுக்குள்ளாக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
‘பாலிசிபஜார் டாட் காம்’ நிறுவனத்தை நிர்வகித்து வரும், ‘பி.பி.,பின்டெக்’, இது குறித்து தெரிவித்துள்ளதாவது:‘பாலிசிபஜார் டாம் காம்’ அடுத்த, 12_15 மாதங்களுக்குள்ளாக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. இதையடுத்து, சர்வதேச முதலீட்டு நிறுவனமான, ‘பே கேப்பிட்டல்’, மூதலீட்டை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இருப்பினும், ‘பேகேப்பிட்டல்’, எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளது என்பதை, பி.பி., பின்டெக் தெரிவிக்கவில்லை.ஜப்பானை சேர்ந்த, ‘சாப்ட்பேங்க்’, ‘பி.பி.,பின்டெக்’ நிறுவனத்தில், 1,460 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொண்டதை அடுத்து, கடந்த, 2018ல் இந்நிறுவனம், ‘யுனிகார்ன்’ நிறுவனமாக உயர்ந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|