பதிவு செய்த நாள்
05 மார்2021
21:18
சென்னை:கடன் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும், அங்கீகாரம் இல்லாத செயலிகள், நிறுவனங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு, வாடிக்கையாளர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:அங்கீகாரம் பெறாத செயலிகள் மற்றும் மின்னணு கடன் வழங்கும் தளங்கள், எளிதாகவும், விரைவாகவும் கடன் வழங்குவதாகக் கூறி, தனி நபர்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களிடம், மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.
மேலும், இவை அதிக வட்டி, மறைமுக கட்டணங்களை வசூலிப்பதோடு, கடனை வசூலிக்க கடுமையாக நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன.இவை குறித்த புகார்களை, https://sachet.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக, பொதுமக்கள் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை, https://cms.rbi.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|