வங்கி சாரா நிதி துறைக்கு  ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரிக்கை வங்கி சாரா நிதி துறைக்கு ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரிக்கை ...  25 லட்சம் சிறிய நிறுவனங்கள் வணிகத்திற்கு அமேசான் உதவி 25 லட்சம் சிறிய நிறுவனங்கள் வணிகத்திற்கு அமேசான் உதவி ...
ஜி.டி.பி.,க்கு நிகரான கடன் குறையும்: பன்னாட்டு நிதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
19:32

வாஷிங்டன்:‘இந்தியாவில், ‘ஜி.டி.பி.,’ எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன் உயர்ந்துள்ள போதிலும், மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாக, அது குறையும்’ என, பன்னாட்டு நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில், பன்னாட்டு நிதியத்தின், நிதி விவகாரங்கள் துறை துணை இயக்குனர், பாலோ மாரோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா தாக்கத்தால், 2019 டிச., – 2020 டிச., வரையிலான ஓராண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், 74 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது மிகவும் அதிகம் தான்.

பணக்கார, வளரும் நாடுகளிலும் இத்தகைய உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதால், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான கடன், விரைவில், 80 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இதற்கு, மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் துணை புரியும்.அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் தொடர முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு பட்ஜெட், அனைத்து தரப்பினர் நலனையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதேசமயம், பொது நிதிச் செயல்பாடுகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை, மக்களுக்கும், முதலீட்டா ளர்களுக்கும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு, நம்பகத்தன்மையுள்ள இடைக்கால நிதிச் செயல்பாட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)