பதிவு செய்த நாள்
13 ஏப்2021
19:09
புதுடில்லி:உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் சேவை குறித்து, இந்திய தொலைதொடர்பு துறை, தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது.
‘டெஸ்லா’ எனும் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். இவரது தலைமையிலான, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணைய சேவையை, இந்தியாவில் வழங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த இணைய சேவையில், தனிநபர் தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்குமா என, பல முனைகளிலிருந்து கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து, இந்த இணைய சேவையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, தொலை தொடர்பு துறை விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.தனிநபர்களுக்கான தகவல்களில் மட்டுமின்றி, நாட்டின் தகவல் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்தும் விரிவாக அலசி ஆராயப்படும் என, தொலைதொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேவை, நாட்டின் தொலைதொடர்பு குறித்த சட்ட விதிமுறைகளை மீறும் வகையிலான அம்சங்கள் எதையும் கொண்டுள்ளதா என்பது குறித்தும் ஆராயப்படும் என தெரிகிறது. தற்போது நாட்டில் இணைய சேவைகளை வழங்கி வரும், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை, ஸ்டார்லிங்க் வழங்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|