பதிவு செய்த நாள்
18 ஏப்2021
20:48
தேசிய பென்ஷன் திட்டமான, ‘என்.பி.எஸ்., மற்றும் அடல் பென்ஷன் யோஜானா’ ஆகிய திட்டங்களுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை, 23 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான, என்.பி.எஸ்., திட்டம் மற்றும் அமைப்புசாரா பணியாளர்களுக்கான அடல் பென்ஷன் திட்டம் ஆகியவற்றை, இந்திய பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது.இந்த திட்டங்களில் மார்ச் மாதம் வரையிலான ஆண்டில், 23 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 4.24 கோடியாக அதிகரித்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு சவாலானதாக இருந்தாலும், பென்ஷன் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடல் பென்ஷன் திட்டத்தில், 33 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு, உறுப்பினர்கள் எண்ணிக்கை, 77 லட்சம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்த திட்டத்தில் மொத்தம், 2.8 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். பென்ஷன் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதன் அடையாளமாக இந்த வளர்ச்சி கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|